ஆர்யன் கான் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுப்பு

Date:

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆர்யன் கானின் பிணை மனுவை நீதிமன்றம் நேற்று (அக். 20) நிராகரித்தது.இந்நிலையில், ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை, அவரது தந்தையும், பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று (அக். 21) சந்தித்து பேசினார்.

இதற்காக காலை 9 மணிக்கெல்லாம் ஷாருக்கான் சிறைக்கு வந்திருந்தார், அங்கிருந்து பாதுகாப்புடன் சிறைக்குள் சென்ற அவர் ஆர்யன் கானை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து அவர் 9.35 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்
அப்போது அவர் சோகத்துடன் காணப்பட்டார். ஆர்யன் கான் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், ஆர்யன் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...