இன்று முதல் திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையின் வரையறை

Date:

இன்று வெள்ளிக்கிழமை (15) முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார்.
அதனடிப்படையில், திருமண மண்டபத்தில் அனுமதிக்கப் படும் நபர்களின் எண்ணிக்கை 25 சத வீதம் வரை மட்டுப்படுத் தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக் கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் மதுபான பாவனைக்கு விதிக்கப்ட்ட தடை தொடரும். அனைத்து திருமணங்களும் பதிவுத் திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.
இறுதிச்சடங்கில் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவ கங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30 வீதம் வரையானவர்கள் அமர்ந்திருந்து உணவருந்த முடியும். மதுபானத் துக்கான தடை தொடரும். இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சமாக 50 பேரைக் கொண் டதாக மண்டபத்தில் நடத்தலாம்.
நிதி நிறுவனங்கள் (வங்கிகள், அடகு வைக்கும் மையங்கள்): ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே 5 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் காத்து வெளியே வரிசையில் நிற்க வேண்டும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...