இலங்கை டி-20 உலகக்கிண்ண அணியில் மேலும் ஐந்து வீரர்கள்

Date:

டி-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில், மேலதிகமாக ஐந்து வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் அஷென் பண்டார ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முன்னதாக செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு மதுசங்க, காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அணியுடன் அவர் இணைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தசுன் சானக தலைமையிலான அணியில், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷன, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலதிக வீரர்களாக லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓமானுக்குப் புறப்படவுள்ளது. அங்கு தனது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...