கரிம உரத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு

Date:

கரிம உரத் திட்டத்தால் விவசாயி பாதிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறுவடை குறைந்து ஏதேனும் நட்டம் ஏற்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் அது தொடர்பாக மதிப்பீட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பாத்திரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ​நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கரிம உரத் திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தின் தரக் குறைவு காரணமாக அதனை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பாக, சீனத் தூதுவர் வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ​​எந்த நாட்டிலிருந்தும் தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. உயர்தரமான உரங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...