கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மீண்டும் ஆரம்பம்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு தயாராகும் வகையில் சத்திர சிகிச்சை அறைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் கஜநாயக்க கூறினார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், இரண்டு சத்திர சிகிச்சை அறைகளில், தினமும் சுமார் 5 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இருதய சத்திர சிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளர்களை அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியும் என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...