சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – பிரதமரின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

Date:

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனைத் துரிதகதியில் நிறைவுசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனப் பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்காலத்தில் இடம்பெறுகின்ற சிறுவர் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குழந்தைகளை அறிவுறுத்தும் செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நாடுபூராகவும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.அதன் மூலம் சிறுவர் வன்கொடுமையினையும் சிறுவர் துஷ்பிரயோகத்தினையும் இயன்றளவு குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...