சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

Date:

புகையிரதம், பேருந்துகள் போன்ற பொது இடங்களிலும், நகர போக்குவரத்து நெரிசல்களிலும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்´ என்ற 2021 உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வளாகத்தில் நேற்று (5) நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

தெரு குழந்தைகளை கையாள்வதற்கு நீதி அமைச்சகத்துடன் கூட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் உதவியுடன் மிக குறுகிய காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வு உலக சிறுவர்கள் தின நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருந்தது. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்துதல், NCPA website (mobile friendly) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் ஆங்கிலத்திலும் தொடங்கப்பட்டது.

வெளிப்புறமாக அடையாளம் காணக்கூடிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு, Child fund and the Payment gateway, சார பெய – சம்பவ கல்வி சஞ்சிகை வழிக்காட்டி தொடரினை வெளியீடுதல், சார பெய- சம்பவ கல்வி உளவியல் சமூகவியல் நிகழ்நிலை சான்றிதழ் திட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு குறித்த வீடியோ விளையாட்டுகள் ஆரம்பிப்பது ஆகிய வேலைத்திட்டங்கள் பல அமைச்சரின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...