சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

Date:

சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் வீதியில் நின்று பதாகைகளை ஏந்தி சூடான் கொடியை பறக்க விட்டனர்.

போராட்டத்தை கலைக்க இராணுவ வீரர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 38 பேர் படுகாயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...