சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

Date:

சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் வீதியில் நின்று பதாகைகளை ஏந்தி சூடான் கொடியை பறக்க விட்டனர்.

போராட்டத்தை கலைக்க இராணுவ வீரர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 38 பேர் படுகாயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...