தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சேவைகள் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

Date:

கொவிட் தொற்று நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் சவீந்திர கமகே குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கைப்பேசி மூலம் 225 என்ற இலக்கத்திற்கு அல்லது நிலையான தொலைப்பேசி மூலம் 1225 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ntmi.lk என்ற இணையத் தளத்திற்கு பிரவேசித்து நேரம், திகதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...