நிர்வாகத்துறை மற்றும் அரச சேவையிலும் நீண்ட கால அனுபவம் பெற்ற மூத்த அதிகாரி அன்ஸார் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவி ஏற்றார்!

Date:

இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீடீர் இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் விவகார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி அஷ்ரப் உடைய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நிர்வாகத் துறையில் நீண்ட முதிர்ச்சியும் ,அனுபவமும் கொண்டவரும் , பல்வேறு நாடுகளில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றி இலங்கைக்கு நற்பெயரை பெற்றுத் தந்தவரும் , வெளிநாட்டு சேவையில் ஒரு மூத்த அதிகாரியுமாவார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...