பஸ் போக்குவரத்து பணியாளர்கள் பற்றாக்குறை-கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Date:

பஸ் போக்குவரத்து பிரிவின் பணியாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்றமையினால், பஸ் போக்குவரத்து பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டமையினால், 50 ஆயிரம் பஸ் பணியாளர்களில் 30 ஆயிரம் வரையிலானவர்கள் சேவைக்கு வரவில்லை என்று விசேஜரத்ன தெரிவித்தார். நீண்ட நாட்களாக வருமானம் எதுவும் கிடைக்காமையினால் அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதையடுத்தே இந் நிலைமை உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனியார் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், மாகாணங்களுக்குள் பயணிக்கு 6, 800 பஸ்களில் 800 பஸ்களே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...