இன்று முதல் திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையின் வரையறை

Date:

இன்று வெள்ளிக்கிழமை (15) முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார்.
அதனடிப்படையில், திருமண மண்டபத்தில் அனுமதிக்கப் படும் நபர்களின் எண்ணிக்கை 25 சத வீதம் வரை மட்டுப்படுத் தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக் கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் மதுபான பாவனைக்கு விதிக்கப்ட்ட தடை தொடரும். அனைத்து திருமணங்களும் பதிவுத் திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.
இறுதிச்சடங்கில் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவ கங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30 வீதம் வரையானவர்கள் அமர்ந்திருந்து உணவருந்த முடியும். மதுபானத் துக்கான தடை தொடரும். இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சமாக 50 பேரைக் கொண் டதாக மண்டபத்தில் நடத்தலாம்.
நிதி நிறுவனங்கள் (வங்கிகள், அடகு வைக்கும் மையங்கள்): ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே 5 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் காத்து வெளியே வரிசையில் நிற்க வேண்டும்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...