இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை அங்கொடயை சேர்ந்த 31 வயதான தாயொருவர் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிசுக்களை பிரசவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளையும் குறித்த தாய் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. தாயும் குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.