இலங்கை டி-20 உலகக்கிண்ண அணியில் மேலும் ஐந்து வீரர்கள்

Date:

டி-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில், மேலதிகமாக ஐந்து வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் அஷென் பண்டார ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முன்னதாக செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு மதுசங்க, காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அணியுடன் அவர் இணைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தசுன் சானக தலைமையிலான அணியில், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷன, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலதிக வீரர்களாக லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓமானுக்குப் புறப்படவுள்ளது. அங்கு தனது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...