இலங்கை டி-20 உலகக்கிண்ண அணியில் மேலும் ஐந்து வீரர்கள்

Date:

டி-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில், மேலதிகமாக ஐந்து வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் அஷென் பண்டார ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முன்னதாக செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு மதுசங்க, காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அணியுடன் அவர் இணைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தசுன் சானக தலைமையிலான அணியில், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷன, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலதிக வீரர்களாக லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓமானுக்குப் புறப்படவுள்ளது. அங்கு தனது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...