எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து

Date:

எரிபொருளின் விலையை எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினைகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவைக்கு தெளிவூட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, இந்த தருணத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும், எரிபொருளுக்கான நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...