எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து

Date:

எரிபொருளின் விலையை எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினைகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவைக்கு தெளிவூட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, இந்த தருணத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும், எரிபொருளுக்கான நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...