ஓமானிலிருந்து மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடை!

Date:

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளது. மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள் மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார்.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் தூதரக ஊழியர்கள் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...