களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

Date:

அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளைக் (06) காலை 8 மணிமுதல் அமுலாகும் வகையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தர, களுவாமோதர, ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும்.

இதனை விட, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் பிற்பகல் 2 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...