சந்தையில் மீண்டும் சீமெந்து தட்டுப்பாடு!

Date:

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு கடந்த சில வாரங்களாக நிலவி வருகின்றது.எனவே சந்தையில் மீண்டும் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படுமென சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் விலையை இரண்டு நாட்களில் நிறுத்த முடியாது , எப்படியும் இரண்டு மாதங்களாவது செல்லும் எனவும் சீமெந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் டொலர் பிரச்சினையாகும்.இதனால் சிறுவிலை அதிகரிப்பு ஏற்படக் கூடும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் இராஜாங்க லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீமெந்து மூடையொன்றின் விலை 93 ரூபாவல் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூடை சீமெந்து 1,098 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.எவ்வாறாயினும் உரிய முறையில் சீமெந்து கிடைப்பதில்லையெனவும் அவ்வாறு கிடைக்கும் சீமெந்து பல்வேறு விலைகளின் கீழ் கிடைப்பதாகவும் விற்பனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.10 சீமெந்து மூட்டைகள் கிடைத்தால் அவை 10 நிமிடங்களில் முடிந்து விடுகின்றன.

இதன் காரணமாக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் சீமெந்து கல் , பூந்தொட்டி மற்றும் பூங்கா அலங்கார பொருட்கள் உற்பத்தியாளர்கள் வருமான வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு சீமெந்தை பெற்றுக் கொடுக்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...