சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

Date:

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

இந்த முரண்பாட்டை தணிக்கும் வகையில் இராணுவ ஜெனரல் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பிரதமர் இம்ரான் கான் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.ஐ.எஸ்.ஐ தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்த நிலையில், அவரின் பதவிக்காலம் முடிந்ததால், நதீம் அகமது என்பவர் தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்திருந்தது

இருப்பினும் நதீம் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தடுத்து வைத்தது இதனால் இம்ரான் – இராணுவ தளபதி கமர் ஜாவேதுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை இம்ரான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...