இலங்கையில் சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இருந்தும் பல பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை மாணவர்களின் இணை பாடவிதானப் செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்து கல்வி அமைச்சுடன் தங்களது கருத்துக்களை பறிமாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று நடைபெற்ற(26) ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.