சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

Date:

சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் வீதியில் நின்று பதாகைகளை ஏந்தி சூடான் கொடியை பறக்க விட்டனர்.

போராட்டத்தை கலைக்க இராணுவ வீரர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 38 பேர் படுகாயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...