தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சேவைகள் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

Date:

கொவிட் தொற்று நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் சவீந்திர கமகே குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கைப்பேசி மூலம் 225 என்ற இலக்கத்திற்கு அல்லது நிலையான தொலைப்பேசி மூலம் 1225 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ntmi.lk என்ற இணையத் தளத்திற்கு பிரவேசித்து நேரம், திகதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...