நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பள்ளிவாசல்களில் சமய நிகழ்ச்சிகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

Date:

2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...