2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.