நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பள்ளிவாசல்களில் சமய நிகழ்ச்சிகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

Date:

2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு...

‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த ‘Expo 2024’ கண்காட்சியும் கருத்தரங்கும்

பாகிஸ்தான் அரசின் உயர்கல்வி ஆணைக்குழுவினால் வருடாந்தம் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்...

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...