பஸ் போக்குவரத்து பணியாளர்கள் பற்றாக்குறை-கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Date:

பஸ் போக்குவரத்து பிரிவின் பணியாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்றமையினால், பஸ் போக்குவரத்து பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டமையினால், 50 ஆயிரம் பஸ் பணியாளர்களில் 30 ஆயிரம் வரையிலானவர்கள் சேவைக்கு வரவில்லை என்று விசேஜரத்ன தெரிவித்தார். நீண்ட நாட்களாக வருமானம் எதுவும் கிடைக்காமையினால் அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதையடுத்தே இந் நிலைமை உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனியார் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், மாகாணங்களுக்குள் பயணிக்கு 6, 800 பஸ்களில் 800 பஸ்களே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...