புதிய சுகாதார வழிகாட்டல்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!

Date:

நாட்டின் அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளை நடாத்திச் செல்ல புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் பௌத்தர்கள் பௌர்னமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும். அத்தோடு கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும்.

குறித்த வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மீறாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேவேளை, சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

திருமணம் மற்றும் ஏனைய விருந்துகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லையெனவும் கொவிட் தொற்று பரவல் இன்னும் முடியவில்லை என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...