பேஸ்புக் நிறுவன செயலிகளின் முடக்கத்தால் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வந்தர் பட்டியலில் பின்தள்ளப்பட்டார்!

Date:

சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளன.அதற்கமைய, 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கிடையில் சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...