போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை நாட்டில் செயல்படுத்த அனைத்து மதத் தலைவர்களும் கைகோர்த்துள்ளனர்!

Date:

நீண்டகாலமாக தொழிற்படாதிருந்த போதை ஒழிப்புப் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அனைத்து மதத் தலைவர்களும் புத்த சாசன கலாச்சார அபைச்சில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.இந் நிகழ்வை தேசிய போதை ஒழிப்பு செயலணி ஏற்பாடு செய்திருந்தது.இதன் இணைப்பாளரான தேசபந்து நளின் அமரசிங்க கலந்து கொண்டார்.இந் நிகழ்விற்கு பிரதமரின் பெளத்த விவகார இணைப்பாளரான கெளரவ அக்ரஹானே கஸ்ஸப்ப நாயக சுவாமி வஹன்ஸ , இஸ்லாம் மதத்திற்கான பிரதமரின் இணைப்பாளரான அல்ஹாஜ் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா ,இந்து மதத்தின் பிரதமரின் இணைப்பாளரான, கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள் , கிறிஸ்தவ மதத்திற்கான பிரதமரின் இணைப்பாளரான , கலாநிதி ஷிஷ்டர் குருகுலசூரியவின் பிரதிநிதியாக ஜுட் பர்னாட் அருட் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத ஆராதனைகளை தொடர்ந்து முதலாவதாக கெளரவ கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப நாயக தேரர் உரையாற்றினார்.
“தற்போது இலங்கையில் அதிகளவான குடும்பங்களின் ஒற்றுமை சீர்குலைவதற்கு இப் போதைவஸ்துக்கு அடிமையாதல் பிரதான காரணமாக உள்ளது.இதனால் இப் பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டியது எல்லோருடைய கடமையாகும் என தனது உரையில் தெரிவித்தார்.

கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள் உரையாற்றுகையில்,
இந்த போதைவஸ்துக்குள்ளான வடக்கு,கிழக்கு இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுக்க அப் பிரதேசத்திற்கு கள விஜயங்கள் மேற்கொண்டு விழிப்புணர்வு வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பை நான் தருவேன் என்று தெரிவித்தார்.

கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா அவர்கள் உரையாற்றுகையில்,
” இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் ஒன்றினைந்து செயல்படுவது மகிழ்ச்சி யளிக்கிறது.மதத் தலைவர்கள் மூலமாக நாட்டில் உள்ள இளைஞர் சமுதாயத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என அவர் கூறினார்.

ஜுட் பர்னாட் அருட் தந்தையும் தனது முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் இச் சந்தர்ப்பத்தில் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் நோக்கத்தை இவ் அமைப்பின் இணைப்பாளர் தேசபந்து நளின் அமரசிங்க விளக்கும் போது, இந்த திட்டம் நீண்டகாலமாக தொழிற்படாது இருந்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முகநூல், யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள்,வயோதிபர்களை முக்கியத்துவப்படுத்தி மதத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் எதிர் வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதியிலிருந்து முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பின் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஊடகப் பங்களிப்பை Newsnow இணையத்தளமும் வழங்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...