நாட்டில் நேற்றைய தினம் ( 30) கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,743 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொவிட் தொற்று உறுதியான 388 பேர் இன்று ( 31) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 540,919 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.