5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  பப்படத்தை எடுத்து சாப்பிட்டதற்கு நெருப்பால் சுட்டதாய் கைது

Date:

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர்  குடியிருப்பு பகுதியில் 08.10.2021  அன்று சிறுமிக்கு  நெருப்பால்  சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
தாயார் சமைத்து வைத்த உணவின்  பப்படத்தை தனது 5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  எடுத்துசாப்பிட்ட காரணத்தினால்  தாயார் பெற்ற குழந்தைக்கு  வாய்பகுதியில்  நெருப்பால் சுட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின்    பேரன் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலிற்கமைய தாயார்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 09.10.2021 இன்றையதினம் சிறுமி கிளிநொச்சி  வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின்  தந்தை   தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.
அக்கரையான்   பொலிசார்  மேலதிக விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  இதேவேளை இன்றையதினம் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார்  தெரிவித்தனர்.

Popular

More like this
Related

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...