60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது.
விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் செயலி ழந்த வைரஸைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுவதுடன், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வைரஸ் குரோமோசோம்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு குரோமோசோம் தடுப்பூசியொன்றைச் செலுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் டெல்டா திரிபு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்ப டுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...