T20 Highlights:டுபாய் மண்ணில் வரலாறு படைத்தது பாபர் படை ! இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அபார வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.152 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் பாபர் அசாம் 68 ஓட்டங்களையும், அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்கள்.போட்டியின் நாயகனாக அதிரடி பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிடம் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தானின் வரலாற்றை பாபர் படை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...