T20 Updates: ஆடுகளத்தில் குயின்டன் டீ கொக் இன்று மண்டியிட்டார்!

Date:

ஐ.சி சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் அனைத்து போட்டிகளும் ஆரம்பிப்பதற்கு முன்னர் மைதானத்தில் மண்டியிட்டும் , வேறு முறைகளிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

கடந்த மேற்கந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.எனினும் மண்டியிட மறுத்த டீ கொக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

இவை கடந்த சில தினங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அதற்கு கொக் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

இன்றைய தினம் இலங்கை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் குயின்டன் டீ கொக் சக வீரர்களுடன் இணைந்து நிற வெறிக்கு எதிராக முழந்தாளிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...