இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்!

Date:

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் மிடுக்கான வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காகவும் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய தரப்பண்பான கல்வி வாய்ப்புக்களை அடையாளங் கண்டு, பிள்ளைகளுக்கு நியாயமான அணுகுமுறைகளை வழங்க வேண்டிய காலத்தின் தேவையை அறிந்துகொண்டு, ´அதிக விளைவு வெளியீடுகளுடன் கூடிய சமூகமட்டக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்´ தொடர்பாக கையொப்பமிட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிகாட்டலுக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த நிதி வழங்கலுக்கான இந்தியக் குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...