ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலி!

Date:

வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் இவ்வாறு வபாத்தாகி உள்ளார்கள்.இவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்கின்ற அதேவேளையில் பொறுமையிழந்த நிலையில் பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதையும் இதன் பின்னனியில் விபத்துக்கள் நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்வதன் மூலம் விரும்பத்தகாத விடயங்களிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...