ஓமானிலிருந்து மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடை!

Date:

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளது. மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள் மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார்.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் தூதரக ஊழியர்கள் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...