கட்டாரில் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகைக்கு அனுமதி!

Date:

கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சாதாரண இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
பள்ளிவாசலில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)
அத்துடன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...