கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மீண்டும் ஆரம்பம்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு தயாராகும் வகையில் சத்திர சிகிச்சை அறைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் கஜநாயக்க கூறினார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், இரண்டு சத்திர சிகிச்சை அறைகளில், தினமும் சுமார் 5 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இருதய சத்திர சிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளர்களை அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியும் என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...