கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மீண்டும் ஆரம்பம்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு தயாராகும் வகையில் சத்திர சிகிச்சை அறைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் கஜநாயக்க கூறினார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், இரண்டு சத்திர சிகிச்சை அறைகளில், தினமும் சுமார் 5 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இருதய சத்திர சிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளர்களை அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியும் என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...