ஜெய்ஸ்வாலின் அதிரடியால் வீழ்ந்தது சென்னை சுப்பர் கிங்ஸ்!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 07விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்வாட் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராகுல் தெவாடியா 39 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 17.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 30ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...