நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பள்ளிவாசல்களில் சமய நிகழ்ச்சிகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

Date:

2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...