நாளை மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளைய தினம் (11) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள், விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யோசனை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கோரியுள்ளார்.இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, எரிவாயுவிற்கான உரிய விலை இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...