இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீடீர் இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் விவகார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி அஷ்ரப் உடைய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
நிர்வாகத் துறையில் நீண்ட முதிர்ச்சியும் ,அனுபவமும் கொண்டவரும் , பல்வேறு நாடுகளில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றி இலங்கைக்கு நற்பெயரை பெற்றுத் தந்தவரும் , வெளிநாட்டு சேவையில் ஒரு மூத்த அதிகாரியுமாவார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.