பஸ் போக்குவரத்து பணியாளர்கள் பற்றாக்குறை-கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Date:

பஸ் போக்குவரத்து பிரிவின் பணியாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்றமையினால், பஸ் போக்குவரத்து பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டமையினால், 50 ஆயிரம் பஸ் பணியாளர்களில் 30 ஆயிரம் வரையிலானவர்கள் சேவைக்கு வரவில்லை என்று விசேஜரத்ன தெரிவித்தார். நீண்ட நாட்களாக வருமானம் எதுவும் கிடைக்காமையினால் அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதையடுத்தே இந் நிலைமை உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனியார் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், மாகாணங்களுக்குள் பயணிக்கு 6, 800 பஸ்களில் 800 பஸ்களே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...