மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள்

Date:

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினாவில், காந்தி சிலையின் கீழே திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் கதர் ஆடை அணிய வலியுறுத்தி காந்தியடிகள் தறி நெய்ததன் அடையாளமாக தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் காந்தியடிகள் குறித்து பாடப்பட்ட பாடல்களை, ஆளுநரும் முதலமைச்சரும் கேட்டு மகிழ்ந்தனர். பாடல்கள் பாடிய மூதாட்டி சுப்புலட்சுமி, 1961ஆம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியன்று பாடல் இசைத்து வருவதாக கூறிய நிலையில் அவருக்கு முதலமைச்சரும், ஆளுநரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...