முகமது நபியை குறித்த கேலிச்சித்திரத்தை வரைந்தவர் விபத்தில் மரணம்

Date:

முகமது நபி குறித்த சர்ச்சை கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடனின் கேலிச்சித்திரக் கலைஞர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

நாயின் உடலில் முகமட் நபியின் தலையைப் பொருத்தி கேலிச்சித்திரம் வரைந்த லாஸ் வில்க்ஸ் என்பவரே கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் டிரக்கொன்று டன் மோதியது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது இரண்டு பொலிஸாரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியவில்லை. ஆனால் விபத்தில் எவருக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2007 இல் வெளியான கேலிச்சித்திரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கின் அல்ஹைதா அவரை கொலை செய்பவர்களிற்கு சன்மானத்தை அறிவித்திருந்தது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...