லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை!

Date:

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடை வித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.லிட்ரோ நிறுவனத்தின் சேவையாளர்கள் அடங்கிய குறித்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை தற்போது 800 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் கிரயம் 2,021 ரூபாவாகும்.எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக 700 ரூபா செலவாகின்றது.இதற்கமைய எரிவாயு 2,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

லிட்ரோ நிறுவனம் கடந்த 9 மாதங்களாகச் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காமையினால் நிறுவனத்துக்கு 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரையில் லிட்ரோ நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு நவம்பர் மாதமளவில் திறைச்சேரியிலிருந்து நிதி கிடைக்காவிடத்து எரிவாயுயை கொண்டு வர முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...