விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

Date:

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவாகியுள்ளார்.

கொரியா நாட்டின் சுவோன் நகரில் இன்று (06) இடம்பெற்ற கூட்டத் தொடரில் அவர் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அனில் ஜாசிங்க அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அந்த கூட்ட தொடரில் பங்கேற்பார்.ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 47 உறுப்பு நாடுகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் சுற்றாடல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...