இலங்கை மனித மூலதன அபிவிருத்திக்காக உலக வங்கியுடன் கை கோர்த்தது!

Date:

நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தின் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உலக வங்கியுடன் கை கோர்த்துள்ளது.இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயற்திட்டத்தில் இணையும் 82 வது நாடாக இலங்கை அமைகிறது.

இன்று (03) நடைபெற்ற உயர்மட்ட மனித மூலதன மாநாட்டிலே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ , பின்வருமாறு குறிப்பிட்டார்,

மக்களில் முதலீடு செய்வது என்பது எமது அரசாங்கத்தின் மூலோபாயத்தில் பிரதானமானதாக இருக்கின்றது. கொவிட்-19 பின்னரான மீட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

ஆரம்ப சிறுபராய கல்வியை மேம்படுத்துவதற்கு, உலகளாவிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை எட்டுவதற்கு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப தொழிற்கல்விக்கான அணுகும் வசதியையும், தரத்தையும் அதிகரிப்பதற்கும், எதிர்கால சுகாதார பராமரிப்பு சவால்களை எதிர்கொள்வதற்கும், சுகாதார பராமரிப்பு முறைமையின் தரத்தை பரவலாக்குவதற்கும், மற்றும் சமுர்த்தி மற்றும் ஏனைய பாதுகாப்பு வேலைகளின் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஊடாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களிற்கு ஆதரவளிப்பதற்கும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு நாம் தொடர்ந்தும் முன்னுரிமையளிப்போம் என கெளரவ நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...